tamilnadu

img

ஹர்ஷ்வர்த்தன் கண்டித்தது நடிகர் ரஜினிகாந்தையா?

கொரோனா பற்றி தவறான கருத்தை பரப்பக் கூடாது

புதுதில்லி, மார்ச் 23- கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக் கள் சுய ஊரடங்கைப் பின்பற்ற வேண் டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். பொதுமக்களும் அதனை ஏற்று சுய ஊரடங்கை கடைப் பிடித்தனர். முன்னதாக மோடியின் அடிப்பொடி கள் சிலர், ‘ஊரடங்கின் தாத்பரியம் தெரியுமா?’ என்று சமூகவலைதளங்க ளில் இஷ்டத்திற்கு கதைகளை அள்ளி விட்டனர். இந்த பக்தர்கள் கூட்டத்திற் குள் நடிகர் ரஜினியும் அதிரடியாக புகுந்தார். “கொரோனா வைரசின் ஆயுள் காலம் 14 மணிநேரம்; ஒரு நாள் முழுக்க இந்த வைரஸ் இன்னொருவரிடம் பரவாமல் இருந்தால், அதன் பிறகு பரவாது” என்பது போல பேசி வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார். இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ரஜினி தவறான கருத்தைப் பரப்புவதாக டுவிட்டர் நிறுவனத்திற்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து, ரஜினியின் அந்த வீடியோவை டுவிட்டர் நிர்வாகமே நீக்கி விட்டது.

இந்நிலையில்தான் மத்திய சுகா தாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “சில சமூக விரோதிகள் ஒரு தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள். இன்றைய ஊரடங்கு உத்தரவு முடிவுற்ற தும் வைரஸ் மாயமாகிவிடும் என்பது போல அவர்கள் கருத்துக்களை கூறு கிறார்கள். இதன் மூலம் இரவு 9 மணிக்கு பிறகு மக்கள் வெளியே வருமாறு அவர் கள் அறிவுறுத்துகிறார்கள். இது தவறா னது மற்றும் பொது மக்களை தவறாக வழி நடத்த முயற்சியாகும். சமூக வில கல் என்பது ஒரு வழக்கமாக மாற வேண் டுமே தவிர ஒரு நாளில் சரி செய்யக் கூடிய விஷயமல்ல!” என்று கடுமையாக சாடி யுள்ளார்.