tamilnadu

img

நாடு முழுவதும் உடனடி கடன்  வழங்கும் திட்டம் துவக்கம்

புதுதில்லி:
நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் வியாழனன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கிக் கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் அக்டோபர் 3  முதல் 4 நாட்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட்வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேசன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன.இதில் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன.இரண்டாவது கட்டமாக இந்த உடனடி கடன் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக 150 மாவட்டங்களில் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிவரை நடத்தப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.