புதுதில்லி:
இந்தியா, வங்கதேச கடற்படைகளின் இரண்டாவது கூட்டு பயிற்சி வடக்கு வங்கக் கடல் பகுதியில் துவங்கியது. ‘பாங்கோசாகர்’ என்ற பெயரில் இந்தியா, வங்கதேசம் கடற்படைகள் இடையே கடந்தாண்டு முதல் கூட்டு பயிற்சி நடைபெற்றது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ்கில்டன், குக்ரி போர் கப்பல்களும்,விமானங்கள் மற்றும் ஹெலிகாப் டர்கள் இதில் பங்கேற்றுள்ளன. இதே போல் வங்க தேச போர்க்கப்பல்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றன.இந்த கூட்டு பயிற்சி முடிந்த பின்இரு நாட்டு கடற்படைகளும் இணைந்துமேற்கொள்ளும் கூட்டு ரோந்து பயிற்சிகள் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. சர்வதேச கடல் எல்லைபகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் ரோந்து பணியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்பட இந்த கூட்டு ரோந்து பயிற்சிமேற்கொள்ளப்படுகிறது.