புதுதில்லி, மார்ச் 20- உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 223 பேராக அதிகரித்துள்ளது. இதில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 32 பேர் உள்ளனர். தொடர் கண்காணிப்பில் 6,700 பேர் உள்ளனர்.இந்தியாவில் பலி யான 5 பேரும் 64 வயதைக் கடந்தவர்கள் என மத்திய சுகாதாரம்-குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இந்தி யாவுக்கு வந்தவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 3 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.