tamilnadu

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உடல் நலக்குறைவால் தில்லி மருத்துவமனையில் இன்று காலமானார்.

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பாரதிய ஜனதா ஆட்சியின் போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் அருண்ஜெட்லி. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக  கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அருண்ஜெட்லி போட்டியிடவில்லை. கடந்த ஓரண்டுக்கும் மேல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 
கடந்த 9-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
அருண் ஜெட்லிக்கு  சங்கீதா என்ற மனைவியும் , ரோகன் என்ற மகனும் உள்ளனர். அருண்ஜெட்லியின் மறைவைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.