tamilnadu

img

நாடு முழுவதும் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு  முழுவதும் நேற்று ஒரே நாளில் 52509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் 19,08,225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 857 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரேனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,795 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொற்று பாதிக்கப்பட்டுள்ள 5,86,244 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 12,82,216 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.