இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் உயரிழிந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய வைரஸ் இன்று உலகில் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 2549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது 2297 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது என தி இந்து இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.