tamilnadu

img

கொரோனா பரவியதால் மத்திய மின்துறை அமைச்சகத்திற்கு சீல்

புதுதில்லி, மே 11- தில்லியில் உள்ள மத்திய மின்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு, கொரோனா உறுதி யானதை அடுத்து ஷ்ரம் சக்தி பவனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஷ்ரம் சக்தி பவனுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். 

கடந்த வாரம் சட்ட விவகாரத் துறை அமைச்சகத்தில் பணிபுரியும் சீனியர் அதிகாரிக்கு கொரோனா உறுதி யானதை அடுத்து சாஸ்திரி பவனுக்கு சீல் வைக்கப்பட்டது. அவர் கடைசியாக ஏப்.,2-ஆம் தேதி அலுவலகத்திற்கு சென் றுள்ளார்.  மே 1-ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தலைநகர் தில்லியில் இதுவரை 6,923 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 2,069 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 73 பேர் உயிரிழந்துள்ளனர்.