tamilnadu

img

இந்தியாவில் வாராக்கடன் 12.5 சதவிகிதம் உயரும்- ரிசர்வ் வங்கி

இந்தியாவில் வாராக்கடன் 12.5 சதவிகிதம் உயரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதாரம் கடும் பாதிப்புகளை சந்தித்திருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வாராக்கடம் 12.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. 
இந்தியாவின் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளின் வாராக் கடன் அளவு 2020 மார்ச் மாதத்தில் 8.5 சதவீதம் உயர்ந்திருந்ததாகவும், அது 2021 மார்ச் மாத இறுதியில் 12.5 சதவீதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரக் காரணிகள் மிக மோசமாக இருப்பதால் அது வங்கித் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் எனவும், நிலைமை இன்னும் மோசமானால் வங்கிகளின் வாராக்கடன் 14.7 சதவீதம் வரையில் கூட உயரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ் பதிப்பால் இந்தியாவின் வளர்ச்சியே முடங்கிவிட்டது. தேவை மற்றும் விநியோகச் சங்கிலியில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தொழில் நடவடிக்கைகள் முடங்கி அனைத்துப் பிரிவுகளிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது வங்கித் துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. தற்போது ஊரடங்கு தளர்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதைக் காணமுடிகிறது. வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. விரைவில் வங்கித் துறை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் செலுத்தாமல் ஏமாற்றும் 2426 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியலை அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் மட்டும் ரூ.147350 கோடி பாக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.