tamilnadu

img

105 கி.மீ. தொலைவில் தேர்வு மையம்.... மகனை சைக்கிளில் அழைத்துச் சென்ற தந்தை

தார், (மத்தியப்பிரதேசம்):
மத்தியப்பிரதேச அரசு 10-ஆம் வகுப்பு தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் அருகில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்யாமல் 105 கிலோமீட்டர் தொலைவில் நகரில் தேர்வு மையம் அமைத்துள்ளது. இதையடுத்து மாணவர் ஒருவரின் தந்தை 105 கி.மீ. சைக்கிளில் அமரவைத்து தனது மகனை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த பைதிபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஷோபிராம். இவரது மகன் ஆஷிஷை 10-ஆம்வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார். மத்தியப்பிரதேச அரசு 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு துணை தேர்வு நடத்த ருக் ஜன நஹின் திட்டம் கொண்டு வந்தது.இதற்கான தேர்வு மையம் தார்நகரில் உள்ள போஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வை விட்டு விட்டால் தனதுமகனுக்கு ஒரு வருடம் வீணாகும் என்பதை உணர்ந்த ஷோபிராம் தனது மகனை எப்படியும் தேர்வு மையத்திற்கு அழைத்து செல்வது என முடிவு செய்தார் .

 கொரோனா காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தனது கிராமத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள தார் நகரத்திற்கு மகன் ஆஷிஷை அழைத்துவந்தார். தேர்வு தொடங்குவதற்கு கால் மணி நேரத்திற்கு முன்னதாக அவர் தேர்வு மையத்தை அடைந்தார்.இது குறித்து ஷோபிராம் கூறியதாவது: முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியாதபாடங்களை எழுதுவதற்கு அரசு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.  கொரோனா காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அரசு வழங்கியுள்ள வாய்ப்பை நான் தவறவிட்டிருந்தால், என் மகனின் ஒரு வருட கல்வி வீணாகியிருக்கும்.

என்னிடம் பணம் வசதியோ இருசக்கர வாகனமோ இல்லை. உதவுவதற்கு யாரும் இல்லை. என் மகனின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, சைக்கிளில் தேர்வு எழுதுவதற்காக அவரை தார் நகரத்திற்கு அழைத்து வந்தேன்.  ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை மகனின் தேர்வுக்காக தங்கவேண்டியுள்ள நிலையில் உணவுப்பொருட்களை எடுத்துவந்துள்ளார்.