tamilnadu

img

ஏழை மாநிலங்களில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்

இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு பின், தற்போது குழந்தை கடத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் பெரும்பாலும் மூடப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவை உழைத்தனர். பல வேலையையும் இழந்துள்ளனர்.

இதில், பீகார் மாநிலத்தில் குடியேறிய குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களது வருமானத்தை இழந்துள்ளதாக யுனிசெப் மற்றும் மக்கள் தொகை கவுன்சில் நிறுவனம் ஜூலை மாதம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் உணவு பொருள்களை வழங்கியுள்ளனர். ஆனால், புலம்பெயர்ந்த குடும்பங்களில் 42 சதவிகிதம் மட்டுமே இந்த உதவிகளை பெற்றுள்ளனர். இதனை பயன்படுத்தி, உணவுக்கு சிரமப்படும் குடும்பங்களை சார்ந்த குழந்தைகளை கடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறினார்கள். 

ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், இந்தியா முழுவதும் குழந்தைகள் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன், காரணமாக நடத்தப்பட்ட விசாரணையில் 1,127 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில், தொடர்புடைய 86 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலான குழந்தைகள் ஜார்க்கண்ட்  அல்லது பீகார் போன்ற ஏழை மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து கடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. ஐந்து மாநிலங்களில் சுமார் 245 வீடுகளில் சத்தியார்த்தியின் குழந்தைகள் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், 21 சதவிகிதம் பேர் 18 வயதிற்கு உட்பட்ட தங்கள் குழந்தைகளை நகரப்பகுதிகளுக்கு வேலைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூர் பகுதியில் குழந்தைகளை உழைப்புக்காக விற்பனை செய்யும் முக்கிய இடமாக உள்ளது. அங்குதான் சிக்கலான வேலைகளை செய்யும் வளையல் தொழிற்சாலைகள் உள்ளன. வடக்கு ஜெய்ப்பூரில் மட்டும், ஜூன் தொடக்கத்தில் இருந்து 20 முறை காவல்துறையினர் நடத்திய சோதனைகளில் 12 சிறுவர் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதே பகுதியில் ஆகஸ்ட் கடைசி இரண்டு வாரங்களில் 50 குழந்தைகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.