புதுச்சேரி,டிச.1- வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று தினங்களாக புதுச்சேரி மற்றும் கிரா மப்புறங்களான பாகூர், திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரு கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை கடு மையாக பாதிக்கப்பட்டு ள்ளது. புதுச்சேரி நகரப் பகுதிகளான ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், பூமி யான்பேட்டை உருளை யண்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. காந்திவீதியில் உள்ள சின்ன அங்காடியில் மழை நீர் புகுந்ததால் மளிகை கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்ட னர். இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் மின்மோட்டரைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றி வருகிறது. இதேப்போல் நகரப்புற சாலைகளில் இருபுறங்களி லும் மழைநீர் வடியாமல் சாலையிலேயே தேங்கி இருந்ததால், வாகனங்களில் செல்வோர்கள் பாதிக்க ப்பட்டனர். மழை தொடர்ந்து பெய்துவருவதால் புதுச்சேரி நேருவீதி, காந்திவீதி நடைபாதை வியாபாரிகள், மாட்டுவண்டி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விடுமுறை இந்நிலையில் தொடர் மழையால் புதுச்சேரியில் திங்கட்கிழமை (டிச. 2) அரசு மற்றும் தனியார்பள்ளி களுக்கு கல்வித்துறை சார்பில் விடுமுறை அறி வித்துள்ளது.