tamilnadu

img

தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே தீ விபத்து

தில்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மர பொருட்கள் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தில்லியில் உள்ள களிண்டி கஞ்ச் மெட்ரோ தொடர் வண்டி நிலையம் அருகே மரப்பொருட்கள் சந்தை அமைந்துள்ளது. இந்நிலையில்  இன்று அதிகாலையில் 5.55 மணியளவில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மரப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்தின் காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நிலைமை சீரடைந்த பின் மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.