புதுச்சேரி, ஆக. 9- கொரோனா பேரிடர் பணிகளை மேம்ப டுத்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில முதல்வர் நாராயண சாமிக்கு கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: மாநிலத்தில் கொரோனா பேரிடர் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சனிக் கிழமை வரை 5 ஆயிரத்திற்கும் மேல் சென் றுள்ளதும், இறந்தவர்களின் எண்ணிக்கை 70ஐ தாண்டியிருப்பதும் நோய் பெருக்கத்தின் அறிகுறியாக உள்ளது. அரசு மருத்துவமனைகளிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதால் அவர்கள் தங்குவதற்கான படுக்கை வசதி களும் போதுமானதாக இல்லை. இந்த சூழ்நி லையில் கொரோனா நோய் தொற்று பேரிட ரின் தீவிரத்தை கணக்கில் கொண்டு தீவிர நட வடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நிவாரணம் போதுமானதாக இல்லை. மேலும் அமைப்புசாரா தொழிலா ளர்கள், கிராமப்புற விவசாய தொழிலாளர்க ளுக்கு அரசின் நிவாரணம் அனைவருக்கும் கிடைக்காமல், நோய் தொற்று அபாயத்துடன் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பிற தொல்லைகளுக்கும் நாள்தோறும் ஆளாகி கொண்டிருக்கிறார்கள். நோய்த் தொற்றி னால் இறப்பு ஏற்படுவதோடு, தற்கொலை சம்பவங்களும் நடப்பதற்கான சாத்தி யக்கூறுகள் இருக்கின்றன. புதுச்சேரி மக்களை நோய் தொற்றி லிருந்து பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டோ ருக்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. எனவே அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலந்து ஆலோ சிக்க உடனடியாக முதல்வர் அனைத்து அரசி யல் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.