புதுச்சேரியில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், இன்று 39 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 32 பேர் புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள், மற்ற 7 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 306 ஆக உள்ளது. இதுவரை 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 20 பேர் ஜிப்மரிலும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.