tamilnadu

img

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

பொன்னமராவதி, பிப்.13- புதுக்கோட்டை பொன்னமரா வதி அருகே வலையபட்டி பாப் பாயி ஆச்சி நினைவு அரசு தலைமை மருத்துவமனைக்கு குடிநீர் சுத்தி கரிப்பு இயந்திரம் சமூக ஆர்வ லர்கள் சார்பில் வழங்கப்பட்டது. இதன் விழாவில் மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.செந் தமிழ்ச்செல்வி வரவேற்றார். முன்னாள் தலைமை மருத்துவர் எம்.சின்னப்பா தலைமையேற்று குடிநீர் இயந்திர பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.  சுகாதார ஆய்வாளர் தியாக ராஜன், காமராஜர் நகர் அப் துல்கலாம் எழுச்சி மன்ற நிர்வாகி இரா.பாஸ்கர், ஜெயராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.கிருபா சங்கர் நன்றி கூறினார். மூன்று வகை பயன்பாடு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தால் நோயாளிகளுக்கு தட்டுப் பாடின்றி குடிநீர் கிடைக்கும்.