அறந்தாங்கி, ஜூன் 8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ஆர்.பத்மநாதன். இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த 5ஆம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு சென்ற போது காவல் உதவி ஆய்வாளர், ஒருமையில் பேசியதோடு வெளியில் போ என்று பேசி மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும், அவர் மீது வழக்கறிஞர் சங்கம் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியிலான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை காலவரை யற்ற நீதிமன்ற பணிகளில் வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜர் ஆக போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.