tamilnadu

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா கவிதை, சிறுகதைப் போட்டி முடிவுகள்

புதுக்கோட்டை, பிப்.16- புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை யொட்டி நடத்தப்பட்ட கவிதை, சிறுகதை களுக்கான போட்டி முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து புத்தகக் திருவிழா ஒருங்கிணைப்புக்குழுவினர் தெரிவித்துள் ளது: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நான்காவது புத்துகத் திருவிழா பிப்.14 முதல் 23-ஆம் தேதி வரை புதுக் கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்று வரு கிறது. இதனையொட்டி கவிதை, சிறு கதைப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் இந்திய அளவில் மட்டு மல்லாது உலகங்கெங்கிலும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் பங்கேற்றுள்ளனர். நடுவர் குழுவின் சார்பில் போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கவிதைப் போட்டியில் அமீரகம் ஜார்ஜா வில் வகிக்கும் பிரியா ‘பற்றி எரியும் நகரம்’ கவிதைக்காக முதல் பரிசும், பெங்களூரை சேர்ந்த ஜலஜா ‘சொல்லின் சுகம்’ கவி தைக்காக இரண்டாம் பரிசும், அகிலா கிருஷ்ணமூர்த்தி ‘சோழியாட்டம்’ கவி தைக்காக மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர். சிறுகதைப் போட்டியில் புலியூர் முருகேசன் ‘நாகையா திருடித்தின்ற நடுத்தோட்டம்’ சிறுகதைக்காக முதல்பரிசும், பா.ஏகரசி தினேஷ் ‘இடர் களையாய்’ சிறுகதைக்காக இரண்டாம்பரிசும், க.மூர்த்தி ‘மண்புணர்க் காலம்’ சிறுகதைக்காக மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வரு கின்ற 23 அன்று புத்தகத் திருவிழா மேடை யில் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். சிறு கதைப் போட்டிக்கு முதல்பரிசாக ரூ.5 ஆயி ரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன் றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் எனவும், கவி தைக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரம் எனவும் வழங்கப்படும்.