புதுக்கோட்டை, ஜூலை.25-புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்களம் தெற்கு பகுதியை சேர்ந்தவர் முத்துதுரை மனைவி திவ்யா(26). அறந்தாங்கியை அடுத்த பாண்டிக்கு டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரும் முத்துத்துரையும் நண்பர்கள். இதனால் அடிக்கடி திருநாவுக்கரசு முத்து துரை வீட்டிற்கு வந்து சென்று உள்ளார். இதில் திருநா வுக்கரசுக்கும் முத்துதுரை மனைவி திவ்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை உறவினர்கள் கண்டித்ததால் திவ்யா, திருநாவு க்கரசுவிடம் பழகுவதை தவிர்த்து வந்தார். இதனால், ஆத்தி ரம் அடைந்த திருநாவுக்கரசு, திவ்யாவை கொலை செய்ய திட்ட மிட்டு, கடந்த 23.10.2016-ந் தேதி திவ்யா இரவு தனது வீட்டின் பின் பக்கத்தில் இருந்த மல்லிகை தோட்டத்திற்கு சென்ற போது அங்கு மறைந்திருந்த திருநாவுக்கரசு, திவ்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். வீட்டின் பின்பக்கம் சென்ற தனது மனைவி வெகுநேரம் ஆகியும் வராததால், அவரை தேடிசென்ற முத்துதுரை, திவ்யா கொலை செய்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திவ்யாவை கொலை செய்த, திருநாவுக்கரசை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி வியாழக்கிழமை தீர்ப்பு கூறினார். அப்போது திவ்யாவை கொலை செய்த குற்றத்திற்காக திருநாவுக்க ரசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.