tamilnadu

img

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை, செப்.17- 35 ஆண்டு காலமாகப் பணி யாற்றிவரும் சத்துணவு ஊழியர் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டு மென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போராட்ட விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை புதுக்கோட் டையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் துரை.அரங்க சாமி, கு.ராஜமாணிக்கம், வே. கிருஷ்வேணி, ஆர்.சீத்தாலெட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் வி. விசாலாட்சி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பெ.அன்பு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.ரெங்கசாமி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில துணைத் தலைவர் பி.பாண்டி, மாநில செயலாளர் அ. மலர்விழி ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாவட்டப் பொருளாளர் வே. அன்னபூரணம் நன்றி கூறினார். 150-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழி யர்கள் பங்கேற்றனர்.