புதுக்கோட்டை, டிச.1- புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதையொட்டி மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி புதுக்கோட்டை நகராட்சி, கம்பன்நகர், பெரியார்நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடி யாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரி வித்ததாவது: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி புதுக் கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு களும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வா கம் அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 12 வட் டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப் பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப் பாட்டு அறை 04322- 222207 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி அமைக் கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை காலங்களில் ஏற்படும் இடற்பாடுகளான கழிவுநீர் அடைப்புகள், சாலைகள் பெயர்தல், மின்கம்பிகள் அறுதல் போன்ற பல்வேறு இடற்பாடு களை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில் இன்றையதினம் புதுக்கோட்டை நகராட்சி, கம்பன்நகர், பெரி யார்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கழிவுநீர் கால்வாய்கள் சரியாக செயல் படுகிறதா, சாலைகளில் நீர் தேங்கு கிறதா, மழைநீரால் சாலை போக்கு வரத்து இடையூரின்றி உள்ளதா போன்ற பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. இதன்மூலம் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் சாலைகள் தோறும் சரிவர செயல்படாத கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சாலை களில் தேங்கும் மழைநீர் போன்ற இடர் பாடுகள் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள் இருப்பின், அதனை உடனடியாக அப்பு றப்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்பி.உமாமகேஸ் வரி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.