அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரில் உள்ள அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஜம்மு காஷ்மீர் பீர்வா அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினர். அறந்தாங்கி கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.கே.ராஜேந்திரன், பேராசிரியர் செந்தில்குமார் முன்னிலையில் முதுகலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவி ம.கெளசல்யா, மாணவர் என்.சிவா, முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஆர்.சந்திரிகா, பி.ஜீவிதா, எஸ்.சுதர்சனா, ஏ.இன்சாத்பேகம், மாணவர்கள் எம்.நிஜந்தன், எஸ்.ரோபர்ட்சன், இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.அபிநயா, இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவர் ச.நாராயணசாமி உள்ளிட்டோர் பீர்வா அரசு கல்லூரி பேராசிரியர்கள் முஷ்தாக்அகமது, தாரிக்அகமது ஆகியோர் முன்னிலையில் அக்கல்லூரி மாணவ மாணவிகளுடன் கலாச்சாரம், பண்பாடு பற்றி காணொலி மூலம் கலந்துரையாடினர்.