tamilnadu

img

பிஎஸ்என்எல்-க்கு பரிசு எப்போது?

அதிவேக இணைய (பிராட் பேண்ட்)வசதிக்காக சென்னையிலிருந்து அந்தமானுக்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று காணொலி வாயி லாக தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தால் அந்தமான்-நிகோபர் தீவுகளுக்கு அதிவேக இணையவசதியை வழங்க முடியும்.

இந்த திட்டத்தை பாரத் சஞ்சார்    நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)  திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே நிறைவேற்றி முடித்துள்ளது. கடலுக்கு அடியில் கேபிள் அமைப்பதற்கான பணிகளை பொதுத்துறை நிறுவனமான  பிஎஸ்என்எல் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அதாவது 24 மாதங் களுக்கு குறைவான கால அவகாசத்திலேயே செய்து முடித்துள்ளது பாராட்டுக்குரியதாகும். டிஜிட்டல் இந்தியா திட்டப்படி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இணைய வசதியை ஏற்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அதிவேக இணைய வசதியை ஏற்படுத்துவது நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இன்றியமை யாததுதான். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜனநாயகம் குலைக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டு இணைய வசதியும் நிறுத்தப்பட்டது. அது இன்று வரை மீண்டும்  ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்படவே யில்லை. வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியும் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்க வில்லை என்பது கவலைக்குரியது.

மிகச் சவாலான இந்தத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே முடிக்கும் திறன்படைத்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது நியாயமல்ல. ஏற்கெனவே 1.5லட்சம் பேர் பணி புரிந்த நிலை மாறி தற்போது சுமார் 65ஆயிரம் பேரே பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்ப தற்கு காரணம் மத்திய அரசின் தனியார்மய ஆத ரவு போக்கே ஆகும். ஏற்கெனவே விருப்ப ஓய்வு  திட்டம் (விஆர்எஸ்) கொண்டு வந்து பிஎஸ் என்எல் நிறுவனத்தை பலவீனமாக்கி உள்ளது. அத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் நிலையும் மிகவும் பரிதாபம். ஏறத்தாழ பணியிலிருந்து அவர்கள் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்ட நிலையே நிலவுகிறது. 

பிஎஸ்என்எல் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் கூட அந்தந்த மாதத்திலேயே வழங்கப் படாத நிலை மிகக் கொடுமையானது. நாட்டின்  பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட அனைத்துவகையிலும் மேம்பட்ட வசதி களை வழங்கக்கூடிய நிலையில் உள்ள  பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி வசதியை தரும் உத்தரவைக் கூட  வழங்காத மத்திய  அரசு மெல்லக் கொல்லும்  உத்தியையே   கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையை  மாற்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தையும்  பணியாளர்களையும் பாதுகாப் பதே அந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க பணிகளுக்கு செய்யும் கவுரவம் ஆகும். அந்த மானுக்கு கொடுத்த சுதந்திர தின பரிசைப்போல பிஎஸ்என்எல்க்கு பரிசு வழங்குவதே நியாயம்.