நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோத சட்டத்திருத்த மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களை எதிர்த்தும், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சிதைத்துள்ள அட்டூழியத்தை கண்டித்தும், செவ்வாயன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விழுப்புரத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.