இரண்டாம் கட்ட நிவாரணம் கோரும் மாநிலங்கள்
புதுதில்லி, மே 4- நாடு தழுவிய ஊரடங்கின் மூன் றாம் கட்டம், மே 4 திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ள நிலையில், மத்திய அரசு மக்களின் துயரங்களை கண்டுகொள்ளவில்லை. தகர்ந்து போன பொருளாதாரத்தை மீட்க இரண் டாம் கட்ட நிவாரண தொகுப்பை அறி விக்க வேண்டும் என்கிற மாநில அரசு களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. தொழில்துறை முடங்கியதால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கி யுள்ளனர். சிறிய மாநிலங்கள்கூட விரி வான தொகுப்புத் திட்டங்கள் அறி வித்து அமல்படுத்தி வருகின்றன. ஆனால், மொத்த உள்நாட்டு வருவா யில் ஒரு சதவிகிதம் அளவிற்கு கூட இல்லாத நிவாரண திட்டத்தையே மத்திய அரசு அறிவித்தது.
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தகர்ந்துள்ளன. தொழிலாளர்களும் சிறுதொழில் முனைவோரும் அடிப் படை தேவைகளுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதம் இந்த துறையின் பங்களிப்பாகும். சீர் குலைவையும், துயரத்தையும் எதிர் கொள்ளும் வகையில் பொருத்த மான பொருளாதார தொகுப்பு திட்டம் தேவை என எதிர் கட்சிகளும் தொழில் துறையினரும் பெருளாதார வல்லு நர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசிடமிருந்து சாதகமான பதில் இல்லை.
பட்டினித் துயரம்
கடந்த ஒன்றரை மாதமாக வருவாய் இல்லாத கோடிக்கண ககான தொழிலாளர்கள் பட்டினி யின் பிடியில் சிக்கியுள்ளனர். ஆண்டு வருமானம் 25 சதவிகிதம் குறைந்து விட்டாலும், நாட்டின் வறுமை நிலை 21.9 சதவிகிதத்திலிருந்து 46.3 சதவிகி தமாக உயரும் என சர்வதேச பொரு ளாதார உறவுகள் தொடர்பான இந் திய ஆராய்ச்சி கவுன்சில் சுட்டிக்காட்டி யுள்ளது. அமைப்புசாரா மற்றும் முறைசாரா துறைகளில் வருமானம் 25 சதவிகிதத்தைவிட குறைந்துள் ளது. வெளிமாநில தொழிலாளர் களில் 86 சதவிகிதம் பேருக்கு சம்ப ளம் கிடைப்பதில்லை. விவசாயத் துறை யும் கடும் வீழ்ச்சியில் உள்ளது.
வரி வருவாய் முற்றாக முடங்கிய நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்க ளுக்கு மத்திய அரசு உதவவில்லை. ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகூட வழங்காமல் நிறுத்தப் பட்டுள்ளது. கடன் உச்சவரம்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சத விகிதமாக உயர்த்துவதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அமைத்த நிபுணர் குழு கோரியது. கேரளா ஏற்கனவே இந்த கோரிக்கை யை முன்வைத்திருந்தது. கொரோனா வுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இல்லை.
ஏழைகளுக்காக மத்திய அரசு ரூ.65,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரூ.200 லட்சம் கோடி ஜிடிபி உள்ள நாட்டில் இது அப்படி ஒன்றும் பெரிதல்ல. வேளாண்துறைக்கும் தொழிலாளர்களுக்கும் துணை நிற்க வேண்டும்.
ரகுராம் ராஜன். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்
ஊரடங்கு நீடித்தால் கொரோனா பாதிப்பில் உயிரிழப்போரைவிட அதிகமானோர் பட்டினியால் உயிரிழப்பார்கள்
நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நிறுவனர்