பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேச்சு
புதுக்கோட்டை, செப்.15- காதலில் தோற்றவன் கவிஞன் ஆகிறான். தேர்தலில் தோற்றவர் ஆளுநர் ஆகிறார். இதுதான் இந்தியா வில் நடைபெறுகிறது. பெண்கள் பிரச்சனை குறித்தோ, தொழிற்சாலை கள் மூடப்படுவது குறித்தோ பாஜக-வுக்கு கவலையில்லை என கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சிறப்பு மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பி.ஆர்.நடராஜன் பேசியதாவது:-
ஒரு மனிதனுக்கு உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறையும்போது எப்படி நோய் வருமோ அதுபோல நாடாளுமன்றத்தில் சிவப்பு சிந்தனை உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும்போது தேசத்திற்கு நோய் வருகிறது. பெரும்பான்மை பலத்தோடு மத்தியில் பாஜக அரசு அமைந்துள்ளது. அதனால் நாம் நடத்தும் போராட்டங்கள் தான் அரசை திரும்பிப் பார்க்கச் செய்யும் லூதியானா, விதர்பா, குஜராத், ஹைதராபாத் போன்ற நகரங்களிலிருந்து வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசியபோது, அங்கெல்லாம் தொழிற்சாலைகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன என வேதனை தெரிவித்தனர்.
தமிழகமும் மிகமோசமான தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு ஆயிரக் கணக்கான மனுக்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் நீங்கள் காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்கிறது பாஜக. ஆனால் காஷ்மீர் மாநிலம் லடாக் மக்களவை உறுப்பினரோ, “நாங்கள் உண்மையிலேயே தவறு இழைத்து விட்டோம்” என்று வேதனைப் பட்டார்.
மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் வேண்டாம். வங்கிகள் மூலமாக வழங்குங்கள் என அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதற்காக போராட வேண்டும். அப்போதுதான் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் நடைபெறும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும். இது போன்ற கோரிக்கைகளுக்காக நாம் போராடும் போது நம்மை திசை திருப்ப மொழி, கல்வி பிரச்சனையை மத்திய அரசு கையில் எடுத்து விவா தத்திற்கு உள்ளாக்குகிறது. நாடாளு மன்றத்தில் காலை 10 மணி முதல் இரவு 11.30 மணி வரை விவாதம் நடைபெறு கிறது. பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறை வேற்றப்படவில்லை. பெண்கள் என்றால் பாஜகவைப் பொறுத்தவரை பாவப்பட்டவர்கள். பெண்களுக்கு எதிரான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது பாஜக. ஒரு கவிஞன் சொன்னான், காதலில் தோற்றவன் கவிஞன் ஆகிறான், தேர்தலில் தோற்றவர் ஆளுநர் ஆகிறார். அதுதான் இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கந்துவட்டிக்காரர்கள் போல் செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்
மாநாட்டில் தாமஸ் பிராங்கோ பேசியது: சுயஉதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் கூட திரும்ப வந்து விட்டது. பெரு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட கடன் இன்று வரை வந்து சேரவில்லை. மைக்ரோ பைனான்ஸ் இன்றைக்கு கந்து வட்டிக் காரர்கள் போல் நடந்து வருகிறது. நீங்கள் வாங்கும் பொருள்கள் அனைத் துக்கும் ஜிஎஸ்டி வரி போடப்படுவது உண்டு. அது அல்லாமல் மக்கள் சொத்து வரி, தொழில் வரி, குழாய் வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி என்று செலுத்தி வருகிறோம். இத்த னை வரிகள் மூலம் வசூலிக்கப்படும் பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையிலிருந்து நிதியமை ச்சர் அருண்ஜெட்லி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இது போன்ற கேள்வி களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று மழுப்பி விட்டார். பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் அதிக அளவிலான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் அந்த நாட்டு மக்களிடம் இவ்வளவு வரி கொடுக்கிறீர்களே அரசுக்கு எதிராக எந்த போராட்டமும் ஏன் நடத்தவில்லை என்று கேட்டால் நாங்கள் ஏன் போராட் டம் நடத்த வேண்டும் என்று கூறு கிறார்கள். அந்த நாட்டில் குழந்தை களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்கிறது. மக்களுக்கான மருத்துவச் செலவை ஏற்று தரமான மருத்து வத்தை அந்த அரசு கொடுத்து வருகிறது என்றார்கள். ஆனால் நம் நாட்டில் கல்வியும், மருத்துவமும் தனியார் மய மாக்கப்பட்டுள்ளது.
4 சதவீத நகைக்கடன் கிடையாது
வங்கிகளில் விவசாயிகளுக்கு 4 சதவீத குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்கப்பட்டு வந்தது. நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றவுடன் அந்த வங்கி கடனை ரத்து செய்து உத்தர விட்டுள்ளார். அக்டோபர் முதல் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கி வந்த 4 சதவீதம் வட்டி மானியம் கிடைக்காது என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. நிதி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து, கண்காணிப்பு நிலை குறித்து ஆய்வு செய்ய நான் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளேன். திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்கார் முதலமைச்சராக இருந்த போது விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. விவசாயிகளுக்கான கடன் வழங்கு வதை கண்காணித்து வந்தது. ஆனால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு வங்கியிலிருந்து கடன் வழங்கப்படு கிறது. ஆனால் அதை முன்னுரிமை கடனாக அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. ஏன் என்றால் அவர்கள் கந்து வட்டிக்காரர்கள் போல் நடந்துகொள் கிறார்கள். கந்து வட்டிக் கொடுமையின் காரணமாக ஆந்திர மாநிலத்தில் தற்கொலைகள் நடைபெற்றன. எனவே மைக்ரோ பைனான்ஸ் மூலமாக கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றால் பயனாளிகளுக்கு வங்கியிலிருந்து நேரடியாக கடன் வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
பெண்கள், குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை
வாலண்டினா வேதனை
நுண் நிதி நிறுவனங்கள் 36சதவீதம் வட்டி வசூல் செய்கின்றன. பயனாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை. மக்கள் தொகையில் பெண்கள் 50 சதவீதம் உள்ளனர். பெண்கள் தான் வாங்கிய கடனை முறையாக செலுத்துகிறார்கள். இதன் காரணமாகத்தான் நுண் நிதி நிறுவனங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்கள் அமைத்து கடன் கொடுத்தார்கள். ஆனால் இந்த நுண் நிதி நிறுவனங்கள் கந்து வட்டிக்காரர்கள் போல வசூல் செய்கிறார்கள் என்ற புகாரை அரசிடம் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெண்களை போகப்பொருளாக பார்க்கிற பார்வை மாறாமல் உள்ளது. பாஜக ஆட்சியில் பெண்கள் குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அபர்ணாசென் போன்றோர் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். ஒரு பக்கம் பெண்கள், குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள், தலித்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையே மோடி அரசில் நீடிக்கிறது.
நவ.25 குழந்தைகள் - பெண்கள் வன்முறைக்கு எதிராக இயக்கம்
பி.சுகந்தி அறிவிப்பு
இந்த மாநாடு மிக முக்கியமான 2 கோரிக்கைகளை முன்வைத்து நடத்துகிறது. ஒன்று நுண் நிதி நிறுவனங்களின் கந்துவட்டிக்கொடுமைகளால் பெண்கள் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இரண்டாவது. பணித்தளங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு முடிவுகட்ட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திலேயே கந்துவட்டிக்கொடுமைக்கு ஆளான குடும்பம் குழந்தைகளோடு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டது. நுண் நிதி நிறுவனங்களின் கந்துவட்டிக்கொடுமைக்கு தமிழகத்தில் 27 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது தொடர்பாக சங்கம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தோம். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டமியற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் அதிமுக அரசு இதுவரை அந்த உத்தரவை அமலாக்கவில்லை. பணித்தளங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல் களுக்கு முடிவு கட்ட 2013ம் ஆண்டு அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அந்த சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் பெண் கல்வியை மறுக்கிறார்கள். 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கூட பொதுத் தேர்வு கொண்டு வர உள்ளார்கள். இந்த கல்வி முறையால் பெண் கல்வி மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை. எனவே பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக நவம்பர் 25ம் தேதி சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தில் இயக்கங்கள் நடத்த உள்ளோம்.