பாட்னா
பீகார் தேர்தல் முடிந்த கையோடு, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் முட்டல் மோதல் ஆரம் பித்துள்ளது.சிராக் பஸ்வானுக்கு பாஜகரகசியமாக சலுகை அளித்ததேதங்களின் தோல்விக்குக் காரணம் என்று ஜேடியு கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்புவரை பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில்தான் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) இருந்தது. ஆனால், நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆவதை தாங்கள் விரும்பவில்லை என்று கூறி, திடீரெனகூட்டணியிலிருந்து விலகியது.அதேநேரம் பாஜக-வைஎதிர்த்து மட்டும் வேட்பாளர் களை நிறுத்த மாட்டோம் என்றுஅறிவித்த அந்தக் கட்சி, தங்களின் எதிரி நிதிஷ்குமார்தான் என்றும் பிரகடனப்படுத்தியது.அதன்படியே வேலையும் பார்த்தது.ஆனால், எல்ஜேபி கட்சி-யின் இந்த முடிவுக்குப் பின் னால் பாஜக இருப்பதாக ஆரம்பத்திலேயே சந்தேகம் எழுப்பப்பட்டது. முதல்வர் பதவியைநிதிஷ் குமாருக்கு விட்டுக் கொடுப்பதில் பாஜக-வுக்கும்உள்ளூர விருப்பம் இல்லை;இதனால் லோக் ஜனசக்தி கட்சியை தனியாக போட்டியிடவைத்து, ஐக்கிய ஜனதாதளத்தை தோற்கடிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்பட்டது.தேர்தல் முடிவுகளும் அதையே வெளிக்காட்டி உள்ளது. கடந்த தேர்தலில் 71 இடங் களில் வெற்றிபெற்றிருந்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம்தற்போது 50 இடங்களைக் கூடபெற முடியாத நிலைக்குத் தள் ளப்பட்டுள்ளது. அதேநேரம், பாஜக கடந்த முறையை விட 22 தொகுதிகளை கூடுதலாக பெற்று, தனிப்பெரும் கட்சியாகி இருக்கிறது.
இது ஐக்கிய ஜனதாதளம் கட்சியை கொதிப்படைய வைத்துள்ளது. “லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக்பஸ்வானை பாஜக கண்டிக்காமல் விட்டதே, ஜேடியு கட்சியின் பின்னடைவுக்குக் காரணம்” என்று அக்கட்சியின் தலைவர் கே.சி. தியாகி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.“கொரோனா வைரஸ்தான்எங்களை தோற்கடித்திருக்கிறது என்றாலும், இந்த தேர்தலில் சிராக் பஸ்வானின் பங்குமிக முக்கியமானது. நிதிஷைதாக்கிப் பேச, சிராக் பஸ்வானுக்கு பாஜக ரகசிய சலுகை அளித்தது. அவரும் நிதிஷ் காலம் முடிந்து விட்டது, பழைய ஆள், அவர் ஒரு சுமை என்றெல்லாம் பேசினார். அவரைதொடக்கத்திலேயே பாஜக கட்டுப்படுத்தி வைத்திருந்தால் ஜேடியு-வுக்கு இவ்வளவு பின்னடைவு இருந்திருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.