சண்டிகர்
கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால் பஞ்சாப்பில் தினசரி இரவு ஊரடங்கு உத்தரவு - மாலை 7 மணி முதல் காலை 5 மணி செயல்படுகிறது. மாநிலத்தின் 167 நகரங்கள் மற்றும் நகரங்களில் வார இறுதி நாளில் ஊரடங்கு என உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்கும் இந்த அவசர நடவடிக்கைகளில், பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு தடை (திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் தவிர) விதிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத கடைகளை மூடப்பட்ட மாவட்டங்களில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவை 5 ஆகும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை இந்த அறிவிப்பை அறிவித்த முதலமைச்சர் அமரீந்தர் சிங், கொரோனா தொற்றுகள் அதிகரித்ததை சமாளிக்க "போர் போன்ற ஆயத்தத்தை" கையாள வேண்டும். மாநிலம் முழுதுவம் 900 திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று மாரணங்கள் நடந்துள்ளது. என்னை வேதனைப்படுத்துகின்றன என கூறியுள்ளார்.
அமிர்தசரஸ், லூதியானா, எஸ்.ஏ.எஸ் நகர், பாட்டியாலா மற்றும் ஜலந்தர் ஆகிய ஐந்து மோசமான மாவட்டங்களின் கணக்கெடுப்புக்குப் பின்னர் இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. ஆகஸ்ட் 1 முதல் 17 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்த மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள அனைத்து மக்களில் 27.7 சதவீதம் பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
வரவிருக்கும் வாரங்களுக்கான கணிப்புகள் கடுமையானவை என்றும், அவசர சுகாதார நிலைமையில் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத மட்டுமே செயல்படும். பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்க அலுவலகங்களும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து 50 சதவீதம் திறன் கொண்டதாக இயங்கும் மற்றும் தனியார் வாகனங்கள் ஒரு வாகனத்திற்கு மூன்று பயணிகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
அரசியல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார், மேலும் தனது சொந்த கட்சியான காங்கிரஸை - தடையை கண்டிப்பாக சுயமாக செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
பஞ்சாபில் இதுவரை 36,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுகள் உள்ளன, அவற்றில் 900 க்கும் மேற்பட்டவை கொரோனா தொடர்புடைய இறப்புகள் மற்றும் 12,000 க்கும் மேற்பட்டவை சிகிச்சையில் உள்ளன. புதன்கிழமை மாநிலத்தில் 24 இறப்புகள் மற்றும் 1,693 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. செவ்வாயன்று 1,704 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகரித்து வரும் வழக்குகளின் மீது, அமரிந்தர் சிங் கொரோனா பரிசோதனையை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30,000 வரை அளவிட உத்தரவிட்டார். கூடுதலாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் தொடர்புத் தடமறிதலும் குறைந்தது 10 பேருக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
லூதியானாவில் 35.6 சதவீதமும், எஸ்.ஏ.எஸ் நகர் 33.2 சதவீதமும், பாட்டியாலா மற்றும் ஜலந்தர் முறையே 19.2 சதவீதமும் 10.8 சதவீதமும் இருந்தன. இந்த ஐந்து மாவட்டங்களும் சேர்ந்து மாநிலத்தின் மொத்த கொரோனா 80 சதவீதத்தில் உள்ளன.