உதகை, ஆக.16- குன்னூர் அருகே அஞ்சல் அலுவலகத்தில் இணைய தளம் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியாறு ஊராட்சிக்குட் பட்ட கரன்சி, மேல் கரன்சி, கரன்சி பஜார், அய்யப்பன் காலனி, டேன்டீ ஆகிய பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந் துள்ள ஒரே ஒரு அஞ்சல் நிலையத்தை நம்பித்தான் இப் பகுதியில் வசிக்கும் முதியோர் உதவித் தொகை, ஓய்வூ தியம், நூறுநாள் வேலைக்கான சம்பளம் பெறுவோர்,
அஞ்ச லகத் தொடர் சேமிப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு வைத்துள் ளவர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த அஞ்சலகத்தில் அடிக்கடி இணையதளம் செயல்படாததால் அவசரத் தேவைக்குப் பணம் எடுக்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும், இப்பகுதியில் பிற வங்கிகளோ, ஏடிஎம் வச தியோ எதுவும் இல்லை. தற்போது கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுப் போக்குவரத்தை அரசு நிறுத்தி உள்ளதால் பெரும்பகுதி மக்கள் 6 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள குன்னூருக்கு நடந்தே சென்று பணம் எடுக்க வேண்டிய நிலை உள் ளது. எனவே இணையதள வசதி ஏற்படுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.