tamilnadu

img

ஸ்டெர்லிங் பயோடெக் ஆலை திறக்காவிட்டால் போராட்டம் - சிஐடியு முடிவு

உதகை, அக்.26- உதகையில் இயங்கிவந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற் சாலையை மீண்டும் திறக்காவிட் டால் மறியல் போராட்டத்தில் ஈடு பட உள்ளதாக சிஐடியு தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தின் ஆயத் தக் கூட்டம் திங்களன்று நீலகிரி சிஐடியு மாவட்ட குழு அலுவல கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஸ்டெர்லிங் பயோ டெக் ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜரத்தினம் தலைமை வகித்தார். செயலாளர்கள் யு. மூர்த்தி, விக்டர் ராஜன், முன்னாள் பொதுச் செயலாள ர் கே.ராஜேந்தி ரன், சிஐடியு மாவட்ட தலைவர் கே.சுந்தரம், ஆர்.ரமேஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   இதில், நீலகிரி மாவட்டம் உதகை சாண்டிநல்லா பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையில் 400க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வந்தனர்.  இந்த நிலையில், தொழிற்சாலை யில் வெளியேறும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் அமைப்பு களை ஏற்படுத்தாததால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தின் உத்தரவால் மின்  இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டு  இங்கு பணிபுரிந்த தொழிலா ளர்கள் அனைவரும் கட்டாய மாக வெளியேற்றப்பட்டனர். இதற்கு பெரும் கண்டனத்தை தெரிவித்த சிஐடியு தொழிற்சங் கம், இந்த ஆலையை மீண்டும்  இயக்க வேண்டும் என்று பல கட்ட  போராட்டங்களையும் நடத்தி யது. மேலும், தொழிலாளர்நல  அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை எந்த வொரு தீர்வு எட்டப்படவில்லை.  இதனால், ஆவேசமடைந்த சிஐடியு தொழிற்சங்கம் கடந்த 7ஆம் தேதி மறியல் போராட்டத் தில் ஈடுபட முடிவு செய்தது. இந் நிலையில், இப்போராட்டத்தின் எதிரொலியாக பைக்காரா காவல் ஆய்வாளர், உதவி ஆட்சியரிடம் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய் தார். ஆனால், அதில் எவ்வித பல னும் எட்டவில்லை.

இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அலு வலர் முன்பு பலகட்ட பேச்சுவார்த் தை நடைபெற நிலையில், இறுதி  கட்ட பேச்சுவார்த்தை நவம்பர்  10ஆம் தேதியன்று நடைபெற  உள்ளது. அதிலும் ஆலையை  திறக்கவும், அதுவரை முழுஊதி யம் நிலுவைத்தொகையுடன் வழங்கவும் தொழிற்சாலை நிர்வா கமும், அரசும் உடனடி ஏற்பாடுகள்  செய்யாவிடில், குடும்பத்து டன் மறியல் போராட்டத்தில் ஈடு பட இருப்பதாக, சிஐடியு தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.