உதகை, மார்ச் 14- குன்னூர் அம்பிகாபுரம் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அம்பிகா புரம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி முன்பு குறுகலான நடைபாதை உள்ளது. இதன ருகில் ஆழமான ஓடை ஒன்று ஓடுகிறது. இங்கு தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், இரவு நேரத்தில் இந்த வழியாக நடக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த ஓடையை ஒட்டி உள்ள நடைபாதையில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.