tamilnadu

வரி வசூல் மையத்தை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை

உதகை, பிப். 27- உதகை நகராட்சியில் வரி வசூல் மையத்தை விரிவு படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, கடை வாடகை உள் ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தி வருகின்றனர். தற்போது 2020-2021 ஆம் ஆண்டுக்கான வரி செலுத்த நகராட்சி அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல் கின்றனர். ஆனால் இங்கு உள்ள வரி வசூல் மையம் போதிய இடவசதி  இல்லா மல் குறுகலாக  இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கை குழந்தை வைத்திருப் போர், மாற்றுத்திறனா ளிகள், பெண்கள், முதிய வர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும்  இதன் கதவு மிக குறுகலாக உள்ளதால் வரிசெலுத்தி விட்டு வெளியே வரமுடி யாமல்  நெரிசலில் சிக்கி  திணறுகிறார்கள். எனவே  நகராட்சி நிர்வாகம் போர் கால அடிப்படையில் உட னடியாக வரி வசூல்  மையத்தை விரிவாக்கம் செய்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுக்கின்றனர்.