tamilnadu

img

‘தமிழ்வாழ்க’ மின்விளக்கு பதாகையை சீரமைக்க கோரிக்கை

நாமக்கல், நவ.13- திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ் வாழ்க’ மின் விளக்கு பதாகை பழுதடைந்துள்ளதை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பேருந்து நிலைய முகப்பில் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னதாக ‘தமிழ் வாழ்க’ என்ற இரவு நேர மின் விளக்கு பதாகை  வைக் கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங் களாக விளக்கு பழுதடைந்துள்ளது.  இதேபோல், பேருந்து நிலையத்தில்  இரவு நேரங்களில் கூடுதல் மின் விளக்குகள் இல்லாததால் பயணிகள் பெரும் சிர மத்தை சந்தித்து வருகின்றனர். எனவே  நகராட்சி அதிகாரிகள் தமிழ் வாழ்க பதாகை யையும், கூடுதல் மின் விளக்குகளும் அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.