tamilnadu

நிவர் புயலால் மின் துறையில்  ரூ.15 கோடியில் சேதம் ... மின்துறை அமைச்சர் தகவல்....

நாமக்கல்:
நிவர் புயலின் சேத மதிப்பு ரூ.15 கோடி என்று இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது.நிவர் புயலால் 2,488 மின்கம்பங்கள் சேதம், மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள் பாதிப்பு. நிவர் புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது.இனிவரும் காலங்களில் புயல், மழையால் பாதிக்காத வகையில், புதைவடமின்கம்பிகள் அமைக்கப்படும். சென்னையில் 95 சதவீத மின் இணைப்பு தரப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.முன்னதாக சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், நிவர் புயலின்போது மின்வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.

;