tamilnadu

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்

சீர்காழி, ஜூலை 13- கொள்ளிடம் அருகே மடவாமேடு கிரா மத்தில் சுருக்குமடி வலையைப் பயன்ப டுத்த அனுமதிக்கக் கோரி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மட வாமேடு கிராமத்தில் மடவாமேடு, பழை யாறு, கொட்டாயமேடு, மன்மதநகர், தாண்ட வன்குளம், புதுப்பட்டினம், தற்காஸ், சின்னகொப்பியம், சீயாளம், கோதண்டபுரம், அளக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2100  குடும்பங்களை சேர்ந்த மீனவ குடும்பத்தினர் சாலையின் நடுவே அமர்ந்து சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீனவர் சங்கத் தலைவர் பிரபு  கூறுகையில், 2100 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுருக்கு மடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்ப ட்டதால் பசிப் பட்டினியால் அவதிப்பட்டு வரு வதாகவும், உடனடியாக சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதியளித்து மீன வர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.