தரங்கம்பாடி, செப்.4- நாகை மாவட்டம், பொறையாறில் உள்ள அரசு மருத்துவமனையில் பாழடைந்த கட்ட டங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக் கப்படுவதால் சிகிச்சைக்கு வந்து செல்லும் நோயாளிகள் அச்சத்துடனே உள்ளனர். பொறையாறு அரசு மருத்துவமனையில் ஆயப்பாடி ,காட்டுசேரி, திருவிடைக்கழி சங்க ரன்பந்தல்,சந்திரபாடி, தில்லையாடி, ஒழு கைமங்கலம், காத்தான்சாவடி, ராஜுவ்புரம், தரங்கம்பாடி, உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை பெறு கின்றனர். 25க்கும் மேற்பட்ட உள் நோயாளி களுக்கு படுக்கை வசதிகள், பிரசவ அறை, சித்த மருத்துவ பிரிவு, அறுவை அரங்கம், ஸ்கேன் அறை, ஊசி போடும் அறைகள் என பல்வேறு அறைகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் அறைகளுக்கான மருத்துவ கருவி களும் இல்லை, அதற்கான ஊழியர்களும் இல்லை. மேலும் பெண்கள் வார்டு அறை பாழ டைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் நோயாளிகள் பயத்திலேயே தங்கி செல்கின்ற னர்.
புதர் மண்டிக் கிடக்கும் வளாகம்
வார்டுகளை சுற்றிய வளாகப்பகுதி முழு வதும் புதர் மண்டி கிடப்பதால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கென உள்ள கழிப்பறைகள் பராமரிப்பின்றி தொற்று நோயை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அதோடு, குடிநீர் வசதிக்காக நன்கொடை யாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கும் இயந்திரமும் ஓரங்கட்டப்பட்டு தண்ணீர் வசதி முற்றிலும் கேள்விக்குறியாகி நோயாளிகள் தண்ணீருக்காக தவிக்கும் சூழல் நீடித்து வருகிறது. மேலும் இந்த மருத்துவமனையில் ஓரிரு மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வரு கின்றனர். செவிலியர்கள், மருந்தாளுநர்கள், வெளி நோயாளிகள் பிரிவு சீட்டு வழங்கும் பணியாளர் ஆகியோரே இந்த மருத்துவ மனையில் பணியாற்றி வருகின்றனர். 10 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இங்கு ஓரிரு மருத்துவர்கள் மட்டுமே பணி யாற்றி வருவதால் நாள்தோறும் புற நோயாளி கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் அவசர சிகிச்சை பெற வருபவர்கள் மயி லாடுதுறை, காரைக்கால் அரசு மருத்துவ மனைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. உடனடியாக கூடுதலாக மருத்துவர்களை நியமிப்பதோடு,இரவு நேரத்தில் மருத்துவர் ஒருவரை பணியில் அமர்த்த வேண்டும். அனைத்துவிதமான மருந்து மாத்திரைகளையும் தடையின்றி வழங்குவதோடு, அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.செயல்படாத மருத்துவ உபகரணங்களை சீரமைத்து ஊழியர்களை நியமித்து பயன்படுத்த வேண்டும். பாழ டைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு கூடுத லான கட்டிடங்களை கட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் நடவடிக்கை இல்லையெனில் விரைவில் போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளார். மேலும் சிகிச்சைக்காக வரும் ஏழை, எளிய மக்களை சில மருத்துவ அதிகாரிகள் கேவலமாக பேசி உதாசீனப் படுத்துவதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.