தரங்கம்பாடி, செப்.30- நாகை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் “தெருக்குள்ளே பிரச்சாரம் “ -என்ற முழக்கத்தோடு படித்த இளைஞர்களுக்கு வேலைக்கொடு என அரசை வலியுறுத்தி 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். சங்கத்தின் வட்டத்தலைவர் வீ.எம்.சரவணன் தலைமையில் நடைப்பெற்ற பிரச்சாரத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் சிங்காரவேலன்,வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ், நிர்வாகிகள் சாமித்துரை,பவுல்சத்தியராஜ் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தில்லையாடி, திருக்கடையூர், காழியப்பநல்லூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், செம்பனார்கோவில், மேமாத்தூர், கடலி, திருவிளையாட்டம், கொத்தங்குடி, நல்லாடை வழியாக சென்ற பிரச்சாரப்பயணம் சங்கரன்பந்தல் கடைவீதியில் நிறைவடைந்தது சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பி.சீனிவாசன் பிரச்சாரத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். பிரச்சாரம் துவங்கியது முதலே பல்வேறு நெருக்கடிகளை கொடுத்த காவல்துறை தில்லையாடியில் பிரச்சாரக் குழுவை சுற்றிவளைத்து கைது செய்து விடுவோம் என மிரட்டியும் தடைகளை மீறி 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.