tamilnadu

20 மாதிரி கிராமங்களில் நீர்வள-நிலவளத் திட்டம் திட்ட ஆலோசகர் ராஜகோபாலன் தகவல்

தரங்கம்பாடி, மார்ச் 4- நாகை மாவட்டத்தில் 20  மாதிரி கிராமங்களில் நீர்வள,  நிலவளத் திட்டம் செயல்ப டுத்தப்படும்  என மயிலாடு துறையில் நீர்வள நிலவள திட்ட ஆலோசகர் ராஜகோ பாலன் தெரிவித்தார். மயிலாடுதுறை அருகே யுள்ள மறையூர் கிராமத்தில் நீர்வள, நிலவள திட்டம் தொடர்பான மாதிரி  கிராமம் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மறையூர் கிரா மத்தை முன்மாதிரி கிராம மாக மாற்றும் வகையில் நடை பெற்ற இக்கூட்டத்தில்,  ர்வள  நிலவள திட்ட ஆலோசகர் ராஜகோபாலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விவசாயிகளிடம் கலந்துரை யாடி விவசாயிகளின் கருத்து க்களை கேட்டறிந்தார். முன்னதாக, இத்திட்டம் குறித்து அவர் கூறுகையில், நீர்வள-நிலவள திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் தண்ணீரை எவ்வாறு சிக்கன மாக செலவழிப்பது  என்பதை  விவசாயிகளுக்கு விளக்கு வது. இப்பணியை வேளா ண்மைத்துறை, தோட்டக்க லைத்துறை, மீன்வளத்து றை, கால்நடைத்துறை உள்ளிட்ட 8 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் விவசா யிகளுக்கு செயல்முறை யுடன் விளக்கம் அளிப்பர். திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றுவதன் மூலம் 30 சதவீத தண்ணீர் மிச்சமாகும். தோட்டக்கலைத் துறை யின் வழிமுறைகளைப் பின்ப ற்றி மாற்றுப்பயிர்களை சாகு படி செய்வதன்மூலம் 30 சத வீத நீரை மிச்சப்படுத்தலாம். ஏரிகளை செப்பனிடுதல், கால்வாய்களை தூர்வாரு தல் மூலமாக 10 சதவீத நீரை  மிச்சப்படுத்தலாம். இவ ற்றை செயல்படுத்த நாகை  மாவட்டத்தில் 20 மாதிரி கிராமங்களை தேர்ந்தெ டுத்து, இத்திட்டம் செயல்ப டுத்தப்படும். இதன் முதற்க ட்டமாக மயிலாடுதுறை வட்ட த்தில் மறையூர் கிரா மத்தில் இத்திட்டம் துவங்க ப்பட்டுள்ளது. மாதந்தோறும் இக்கிராமங்களில் கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்துத் துறை அதிகாரிகள் பயிற்சி வழங்குவர். விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி மாவட்டத்தின் முன்மாதிரி கிராமமாக விளங்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.