சீர்காழி: சீர்காழி அருகே ஆயங்குடி கிராம துவக்கப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் இலவசமாக குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்துடன் கூடிய குடிநீர்த் தொட்டி வழங்கப் பட்டது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆயங்குடிபள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி யில் கடந்த 1996 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் தான் படித்த பள்ளியை மறக்காமல் தற்போதைய மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ரூ.40 ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்துடன் கூடிய குடிநீர்த் தொட்டியையும் தலைமையாசிரியர் ஜெயாவிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.