tamilnadu

img

அரசுப் பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்

புதுக்கோட்டை, செப்.9- புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. குளமங்கலம் வடக்கு, திருநார், குளமங்கலம் தெற்கு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடர்ந்து நூறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளில் இந்தப் பள்ளியும் ஒன்றாக உள்ளது. இந்நிலை யில், பள்ளியில் நடத்தப்படும் விழாக்களுக்கு ஒரு மேடை வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் மாணவர்களடம் ஆசிரியர்கள் வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து முன்னாள் மாண வர்கள் சங்கம் அமைத்து தாங்கள் படித்த அரசுப் பள்ளிக்கு தங்கள் சொந்த செலவில் விழா மேடை அமைப்பது என்று முடிவெடுத்த னர். அதன்படி பணிகள் முழுமையடைந்து மேடையை பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா மற்றும் பள்ளியின் ஆண்டுவிழா, ஆசிரியர் தின விழா ஆகிய முப்பெரும் விழா தலைமை ஆசி ரியர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.  விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தயாளன் உள்ளிட்டோர் முன் னிலை வகித்தனர். விழாவில் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட விழா மேடையை அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திரா விடச்செல்வத்திடம் முன்னாள் மாணவர்கள் ஒப்படைத்தனர். முன்னதாக ஆசிரியர் சிவா னந்தம் வரவேற்றார், ஆசிரியர் செம்புலிங்கம் நன்றி கூறினார்.