tamilnadu

தூத்துக்குடி: வெவ்வேறு சம்பவங்களில்  வாலிபர் உட்பட 3 பேர் பலி

 தூத்துக்குடி,ஜூலை 14- தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கோவில்பட்டி புளியங்குளம் கிழக்குதெருவை சேர்ந்த சமுத்திரவேல் என்பவர் மகன் காளிராஜ் (27). ஆடு மேய்க்கும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஆடு  மேய்த்துக்கொண்டிருந்த போது விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வி.கே. புரத்தை சேர்ந்தவர் பகுரான் மகன் ஜான்ராஜா (45). லாரி ஓட்டுநர். இவர் தூத்துக்குடி துறைமுக ரோட்டில் உள்ள லாரி செட்டில் லாரியை நிறுத்தி வைத்திருந்தாராம். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
முதியவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, சுப்பிர மணியபுரத்தை சேர்ந்தவர் அதிஅரசு பாண்டியன் (79). இவரது மனைவி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து அவரது மகன் சொத்துகளை பிரித்துக்கேட்டதாக தெரி கிறது. இதனால் விரக்தியடைந்த அதிஅரசு பாண்டியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல்துறையி னர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.