தூத்துக்குடி, மே 31- தூத்துக்குடியில் பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை யடிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவு சிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர பாண்டி மகன் சுடலைமணி (55). இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத் தன்று சுந்தரபாண்டி வீட்டினை பூட்டி விட்டு சாயர்புரம் சென்றாராம். நேற்றி சனி யன்று இரவு திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டி ருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த சுமார் 2 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.