tamilnadu

img

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் வழங்குக! அரசு ஊழியர் சங்க மகளிர் தின விழாவில் வலியுறுத்தல்

திருவாரூர், மார்ச் 12- அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் தெற்கு வீதி யில் அமைந்துள்ள அரசு ஊழியர் சங்க  கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட மகளிர் துணைக்குழு அமை ப்பாளர் ஜெ.சசிகலா தலைமை வகி த்தார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பெசன்ட் அரங்க த்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்க  மாவட்டத் தலைவர் சா.கோத ண்டபாணி தலைமை வகித்தார். மாவ ட்ட அமைப்பாளரும், மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினருமான ச.செல்வி வரவேற்புரையாற்றினார். குந்தவை நாச்சியார் கலைக் கல்லூ ரியின் தமிழ் துறை பேராசிரியரும், முனைவருமான தி.ஹேமலதா கருத்துரை வழங்கினார். மாநில செய லாளர் உ.சண்முகம் சிறப்புரையாற்றி னார். நிறைவாக மாவட்ட மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் ச.ஹேமலதா நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்ட மையம்  சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மா வட்ட மகளிர் துணைக் குழு அமை ப்பாளர் பா.ராணி தலைமை வகித்தார். “புரையோடிய பொய்மை யெல்லாம் புரண்டோடட்டும்” என்னும் பொருளில் எழுத்தாளர் ’வானவில்’ ரேவதி சிறப்புரையாற்றினார்.  நிறைவாக, பெண் கல்விக்கு ஊக்கமளிக்க வேண்டும்; பணியி டத்தில் பெண்களுக்கெதிரான பாலி யல் தொந்தரவுகளைக் கடுமையாக அடக்க வேண்டும்; பத்துக்கும் மேற்ப ட்ட பெண்கள் பணி செய்யும் இடங்க ளில் புகார்க் குழு (விசாகா கமிட்டி)  அமைத்திட வேண்டும்; பணி செய்யும்  இடங்களில் பெண் ஊழியர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கக் குழ ந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்; இடைவெளி இல்லாமல் பெண்களை 5 மணி நேரத்துக்கு மேல்  பணியில் ஈடுபடுத்துவதைத் தடை செய்ய வேண்டும்; பெண்களுக்கு, ஆண்களுக்கு இணையாகச் சம  வேலைக்குச் சம ஊதியம் வழங்க  வேண்டும்; உழைக்கும் பெண்களு க்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தப ட்சக் கூலியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி  உறுதிமொழி ஏற்றனர்.