tamilnadu

‘பருத்தி புடவையாக காய்க்காவிட்டாலும் பரவாயில்லை’ கொடுக்க வேண்டிய காசை கொடுத்தால் போதும்: விவசாயிகள்

திருவாரூர், ஆக.12- தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதலில் புதிய சாதனையை படைத்துள்ளதாக தமிழக அரசு தெரி வித்துள்ளது. அதே நேரத்தில் டெல்டா மாவட்டத்தில் பல இடங்களில் விளை வித்த நெல்லை விற்பனை செய்ய முடி யாமல் விவசாயிகள் தவித்து வருகின்ற னர். எனவே திருவாருர் மாவட்ட நிர்வா கம் துரித நடவடிக்கை எடுத்து நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நா.பாலசுப்ரமணி யன் தலைமையில் திருவாரூரில் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்க ளில் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை. குறிப்பாக நன்னி லம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேர ளத்தில் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை வைத்தும் திறக்கப்பட வில்லை.

இப்பகுதி விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலை யத்திற்கு முன்பாக அடுக்கி வைத்து அதிகாரிகளை எதிர்பார்த்து காத்தி ருக்கின்றனர். அவ்வப்போது மழை பெய் யும் அறிகுறி தெரிவதால் அச்சத்திலும், ஏற்படப்போகும் இழப்பையும் எண்ணி வேதனைப்படுகின்றனர்.  எனவே உடனடியாக பேரளம் கொள் முதல் நிலையத்தை திறந்து நெல் மூடைகளை கொள்முதல் செய்ய வேண் டும். தமிழக உணவுத்துறை அமைச்சரின் தொகுதியிலேயே இப்பிரச்சனை நிலவு வது விவசாயிகளின் துயர நிலைமை யை தெளிவாக காட்டுகிறது. அதே போல மருதவாஞ்சேரி, திருவீழிமி ழலை, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலைமை நீடிக்கி றது. எனவே மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். 

பருத்தி விவசாயி
நெற்களஞ்சியத்தின் மற்றொரு சோகமாக பருத்தி விவசாயத்திற்கு மாறிய விவசாயிகளின் நிலைமை மாறி யுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயி கள் நெல் விளைந்த பூமியில் பருத்தி விவ சாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி பெரும் பொருட்செலவு செய்து பருத்தியை விளைவித்தினர். அதனை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பதற்காக நாட்கணக்கில் இரவு, பக லாக கண்விழித்து காத்திருந்து விற் பனை செய்தனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை அதற்கான தொகை வழங்கப் படவில்லை.  உற்பத்தி செய்யப்பட்ட பருத்திக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை யென்றாலும் கூட கொள்முதல் செய்யப் பட்ட அரசு விலையைக்கூட உடனடி யாக தராமல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இழுத்தடிக்கிறது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள் ளது. “பருத்தி புடவையாக காய்க்கா விட்டாலும் பரவாயில்லை” கொடுக்க வேண்டிய காசை கொடுத்தால் போதும் என்கிறார்கள் விவசாயிகள். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலை யிட்டு பருத்தி விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

சிபிஎம் இயக்கம்
கட்சியின் மத்தியக்குழு முடிவின் படி, மத்திய அரசு மக்கள் விரோத நட வடிக்கைகள், பொதுத்துறை சொத்துக் களை தனியார் மயமாக்குவது, அந் நிய கார்ப்ரேட்டுகளுக்கு சிவப்பு கம்ப ளம் விரிப்பது போன்ற நடவடிக்கை களைக் கண்டித்தும், கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கை மற் றும் சுற்றுச்சூழலை சீரழிக்கும் சுற்றுச் சூழல் 2020 சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ளது.  இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஆக.20 முதல் ஆக.26 வரை வீடு வீடாக மக்களை சந்தித்து துண்டு பிர சுரங்கள் மூலமாக மக்களுக்கு தற்போ தைய அரசியல் சூழ்நிலையை விளக்கு வதென்றும் ஆக.26 அன்று அனைத்து கிளைகளிலும் தனிமனித இடைவெளி யுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என வும் முடிவு செய்துள்ளது.