tamilnadu

img

மறுவாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி


குடவாசல்: மறு வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட அதம்பாவூர் ஊராட்சியில் சசிகலா, கவிதா உள்ளிட்ட 7 பேர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நிலையில் கடந்த  30 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று சசிகலா என்பவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவரது வாக்கை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி மனு அளித்தார்.  இதன் காரணமாக அதம்பாவூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மட்டும் கடந்த ஜன.2 அன்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த டிச.23 அன்று தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் விடுபட்ட கார ணத்தால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் புதனன்று குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பொற்செல்வி தலைமையில் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் கவிதா பூமிநாதர் என்பவர் 781 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார். சசிகலா 46 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;