tamilnadu

img

கொள்ளிடம் ஒன்றியம்  வளர்ச்சிக்கு நிதி உதவி 

மன்னார்குடி, ஜூன் 3-கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்வதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரூ.26 லட்சத்துக்கான காசோலையை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கியது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் மாதானம், திருமுல்லைவாயில், புதுப்பட்டினம், வேட்டன்குடி, கொடியம்பாளையம், திருக்கருகாவூர், பழைய பாளையம், ராதாநல்லூர் பகுதி மக்களின் குடிநீர்,கழிப்பறை, சமூதாயக் கூடம், மீன், கருவாடு வியாபாரம் செய்ய வசதிமற்றும் அரசு பள்ளிகளில் குடிநீர், சுற்றுச்சுவர் போன்ற வசதிகளைசெய்து கொடுக்க ரூ.2 கோடியே 52 லட்சம் நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டு முதல் தவணையாக ரூ.26 லட்சத்திற்கான காசோலையை கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் ஓஎன்ஜிசிசெயல் இயக்குனர் வி.வி.மிஸ்ரா வழங்கினார்.நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி முதன்மை பொதுமேலாளர்கள் சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், விஜயராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசேகரன், சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி உஷா பிரபாகர்,நற்குணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.