திருவள்ளூர், மே 30- ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு 2 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்கள் 280 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த ஊழியர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதிமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மாதாமாதம் ஓய்வூதி யர்களின் வங்கி கணக்கில் வட்டார வளர்ச்சி அலுவலர் செலுத்தி வந்தார். ஆனால், ஏப்ரல், மே மாத ஓய்வூதியத்தை செலுத்தாமல் உள்ளார். இந்த மாவட்டத்தில் பிற ஒன்றியங்க ளிலும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள் ளது. ஆனால், திருவாலங்காடு பிடிஓ அலுவலகத்திற்கு உட்படவர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டம் தலைவர் ஜி.சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் து.மகேந்தி ரன் ஆகியோர் வெள்ளியன்று (மே 29) திருவாலங்காடு பிடிஒ-வை நேரில் சந்தித்து ஓய்வூதியத்தை வழங்க வலி யுறுத்தினர். மேலும், ஏற்கெனவே, வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 600 ரூபாயும், அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு பிணை வைப்புத் தொகை 300 ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், அதிகாரிகள் காலதாமதம் செய்வதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஓய்வூதியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.