tamilnadu

img

ரூ.17 கோடி நிலுவை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர், ஜூலை 20- திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை  நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.17 கோடி  பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி திங்க ளன்று (ஜூலை 20) திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவாலங்காடு பகுதியில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகி றது. இந்த ஆலைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவ சாயிகள் கரும்புகளை அனுப்பி வருகின்ற னர். இதில் 2019-20 ம் ஆண்டு கரும்பு கொள்  முதல் செய்ததற்கான தொகை ரூ.17 கோடி  பாக்கி தொகையை உடனே வழங்க வேண்  டும், 2015-16 மற்றும் 2016-17ம் ஆண்டு எஸ்ஏபி  பாக்கித் தொகையை வழங்க வேண்டும், சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும்,  மொலாசஸ் விற்றதில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் கோதண்டராமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட  தலைவர் ஜி.சம்பத், செயலாளர் பி.துளசி நாராயணன், கோட்டச் செயலாளர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டையில் கரும்பு விவசாயி கள் சங்கத்தின் கவுரவ தலைவர் ராஜ கோபால் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சி.பெருமாள் உட்பட பலர் கலந்து  கொண்டனர். அத்திமாச்சேரியில் கோட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ்.மணி தலை மையிலும், பொதட்டூர்பேட்டையில் ஓ.சி. மணி, கருணாமூர்த்தி ஆகியோர் தலைமை யிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருத்தணியில் மாவட்டத் தலைவர் பி.பாபு, எ.அலசல் அகமது தலைமையிலும், பாண்ரவேட்டில் கோட்டச் செயலாளர் ரவி சந்திரன், மாநில குழு உறுப்பினர் ஜெயச் சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.