திருவள்ளூர், ஜூலை 31- வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணப்பய ன்கள் கிடைக்காததை கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் புதனன்று (ஜூலை 31 ) அனல் மின் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையம் ஆகிய வற்றில், ஆண்டுதோறும் வழங்கப்படும் வருங்கால வைப்புநிதி, ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய அனல் ஊக்கத் தொகை, லீவ் சரண்டர் ஆகியவற்றுக்கான பணப்பயன்கள் ஊழியர்க ளுக்கு வழங்கப்படவில்லை. பணப்பயன்கள் கிடைக்கா ததால் தங்கள் பிள்ளை களுக்கு கல்விக் கட்டணம், மருத்துவ உதவிக்கு பண மில்லாமல் அவதிப்படுவ தாக ஊழியர்கள் கூறுகின்ற னர். இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால், மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து அனல் மின் நிலையங்களுக்கு நிதி வரவில்லை என கூறவதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், வடசென்னை அனல்மின் நிலையத்தின் நுழைவாயில் முன்பு தொமுச தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலை வர் இ.ஜெயவேல், செயலா ளர் சுந்தரம், பொறியாளர் யூனியன் நிர்வாகி மகேஸ்வரன், எண்ணூர் அனல்மின் நிலைய சிஐடியு செயலாளர் கே.வெங்க ட்டையா, தலைவர் வெங்க டேசன், தாமோதரன் (ஐஎன்டியுசி), பால கிருஷ்ணன், சசிகுமார், கண்ணபிரான், பரமசிவன் (தொமுச) உட்பட பலர் கலந்து கொண்டனர்.