tamilnadu

மக்கள் தொடர் திட்ட முகாம்கள்  அனைத்தும் ஒத்திவைப்பு

திருவள்ளூர், மார்ச் 18- திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம், விவசாயிகள் குறைத் தீர்வு நாள் கூட்டம் ஆகியவை கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் 31 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர்  மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.